சேலம், செப்.25: சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் சில்லிகடை வைத்திருப்பவர் ராஜகோபால்(60). இவரது கடைக்கு நேற்றுமுன்தினம் இரவு வந்த 4 பேர், காளிபிளவர் கேட்டுள்ளனர். பணம் இல்லாமல் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால், கோபம் அடைந்த அவர்கள் டேபிளை தள்ளிவிட்டு சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார், சண்முகாநகர் மதுரை காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த தாமு(எ) தாமோதரன்(22), தினேஷ்குமார்(20), ராகுல்(23), அம்பாள்ஏரி ேராட்டை சேர்ந்த சுரேந்தர்(19) ஆகியோரை கைது செய்தனர்.