கடையின் பூட்டை உடைத்து கொள்ளை

புழல்: செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் கல்பகா நகர் 2வது தெருவை
சேர்ந்தவர் சேகர்(46). எம்.ஏ.நகர் ஜி.என்.டி சாலையில் டயர் கடை நடத்தி
வருகிறார். நேற்று மதியம் 1 மணிக்கு சாப்பிட அருகில் உள்ள தனது வீட்டுக்கு
சென்றார். கடையின் ஷட்டரை மூடாமல் அலுமினிய கதவை மட்டும் பூட்டிவிட்டி
சென்றுள்ளார். பின்பு மாலை 3 மணிக்கு கடைக்கு வந்து பார்த்தார். அப்போது
கடையின் கல்லாவில் வைத்திருந்த ரூ.59 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து செங்குன்றம் போலீசார், வழக்கு பதிவுசெய்து கொள்ளையனை
தேடுகின்றனர்….

Related posts

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது

நடிகை சோனா வீட்டில் புகுந்து மிரட்டிய இருவர் கைது

மோசடி வழக்கில் தவெக நிர்வாகி ராஜா கைது