கடையம் அருகே சணல் பொருட்கள் தயாரிக்க பெண்களுக்கு பயிற்சி

கடையம், ஜூன் 10: கடையம் அருகே தர்மபுரம் மடம் ஊராட்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து 13 நாட்கள் சணல் பொருட்கள் தயாரித்தல் பெண்களுக்கான பயிற்சி நடைபெற்றது. தொடர்ந்து சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தர்மபுரம் மடம் ஊராட்சி மன்ற தலைவர் ரூஹான் ஜன்னத் சதாம் இரண்டு ஒன்றிய அரசு சான்றிதழ்களை வழங்கினார். கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயக்குனர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அனுசுயா சைலப்பன் நன்றி கூறினார்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்