கடைகளில் குட்கா விற்ற 24 பேர் கைது

கிருஷ்ணகிரி, மார்ச் 15: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அந்தந்த காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, பர்கூர், கந்திகுப்பம், பாரூர், நாகரசம்பட்டி, கிருஷ்ணகிரி, ஓசூர், பாகலூர், பேரிகை, சூளகிரி, மத்திகிரி, தேன்கனிக்கோட்டை, தளி, ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, அஞ்செட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில், தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து 24 கடைகளில், ₹3,230 மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அதனை விற்பனை செய்த 24 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ரயில் நிலையத்தில் கடை வைத்து தருவதாக பாஜ நிர்வாகி ₹2.5 லட்சம் மோசடி பெண் தற்கொலைக்கு முயற்சி : கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு

போதையில் தங்கையை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்; மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: உடன் பணியாற்றிய வாலிபர் கைது

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசூலிப்பு; மும்மடங்கு லாபம் தருவதாக கூறி 1,930 பேரிடம் ₹87 கோடி மோசடி: 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டது அம்பலம்