கடவுளுக்கு தெரிந்த உண்மையை ஓபிஎஸ் சொல்லி இருக்கிறார்: சசிகலா பேட்டி

சென்னை: என் மீது மதிப்பு இருப்பதாக ஓபிஎஸ் உண்மையை சொல்லியுள்ளார் என சசிகலா கூறியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களை சசிகலா நேற்று சந்தித்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடவுளுக்கு தெரிந்த உண்மை நேற்று மக்களுக்கும் தெரிந்துள்ளது. எது உண்மையோ அது காலதாமதமாக வரலாம். உண்மையை யாரும் மாற்றமுடியாது. திரையிட்டு மறைக்க முடியாது. அதிமுக தலைமையில் இருந்து எந்தவித பதிலும் வராதது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. தொண்டர்கள் தான் அதிமுகவின் ஆணிவேர். எம்.ஜி.ஆர் ஆரம்பித்த போதே சட்டதிட்ட விதிகளில் அதை கூறியிருக்கிறார். தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அது தான் நடக்கும். என் மீது மதிப்பு இருப்பதாக ஓபிஎஸ் உண்மையை சொல்லியுள்ளார். ஆறுமுகசாமி ஆணையம் ஆரம்பிக்கும் போது கூட உண்மை என்ன என்று தெரிய வேண்டும். அது பொதுமக்களுக்கும் தெரிய வேண்டும். ஆணையம் அமைத்தது நல்லதுதான் என ஆரம்பத்தில் இருந்து நான் சொல்லி வந்தேன். அது தற்போது முடிவுக்கு வந்துள்ளது. என் மீது சந்தேகம் இருப்பதாக மக்கள் சொன்னதாக நான் எடுத்துக்கொள்ளவில்லை. அரசியலில் என்னை பிடிக்காதவர்கள் இதை ஆரம்பித்து வைத்திருக்கலாம். இவ்வாறு கூறினார்….

Related posts

பாஜகவிற்கு வழிவிட்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

பொய்மையின் மொத்த உருவம் எடப்பாடி பழனிசாமி: ஒ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

விக்கிரவாண்டியில் இன்றுடன் பரப்புரை ஓய்கிறது