Saturday, July 6, 2024
Home » கடல்சார் பல்கலை இயக்குனரை பணிநீக்கம் செய்த உத்தரவு ரத்து: ஐகோர்ட் தீர்ப்பு

கடல்சார் பல்கலை இயக்குனரை பணிநீக்கம் செய்த உத்தரவு ரத்து: ஐகோர்ட் தீர்ப்பு

by kannappan

சென்னை: முந்தைய பணியின் போது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இந்திய கடல்சார் பல்கலைக்கழக வளாக இயக்குனரை பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராக கடந்த 2008ம் ஆண்டு நியமிக்கப்பட்ட விஜயன், மூன்று ஆண்டுகள் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, அதே பல்கலைக்கழகத்தின் வளாக இயக்குனராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கடல்சார் பல்கலைக்கழக இயக்குனராக நியமிக்கப்பட்ட பிறகும், துணை வேந்தருக்கான வசதிகளை பயன்படுத்தி வந்ததாகவும், இதனால் பல்கலைக்கழகத்திற்கு 22 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறி, அந்த தொகையை திருப்பிச் செலுத்துமாறு பல்கலைக்கழகம் விஜயனுக்கு உத்தரவிட்டது. இதேபோல, இந்திய கடல்சார் பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்படும் முன் பணியாற்றிய இடத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்ததை அடுத்து அவருக்கு எதிராக துறைரீதியான விசாரணை நடத்திய கடல்சார் பல்கலைக்கழகம் அவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.இந்த இரு உத்தரவுகளையும் எதிர்த்து விஜயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுக்களில், முந்தைய பணியில் நிகழ்ந்ததாக கூறப்படும் குற்றத்திற்காக இந்த பதவியில் இருந்து நீக்கியது செல்லாது. துணை வேந்தருக்கான வசதிகளை பயன்படுத்தியதற்காக விதிக்கப்பட்ட அபராதத்தையும் ரத்து செய்ய வேண்டு்ம் என்று கோரியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சி.சரவணன், இந்திய கடல்சார் பல்கலைக்கழக பணியாளர் விதிகளின்படி, இயக்குனராக உள்ள மனுதாரரை பணி இடைநீக்கம் செய்யவோ, பணி நீக்கம் செய்யவோ முடியாது. எனவே, அவரது பணி நீக்க உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. துணைவேந்தர் பதவிக்காலம் முடிந்ததும், அந்த வசதிகளை பல்கலைக்கழகம் திரும்பப் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் தற்போது அதை அபராதமாக வசூலிக்க முடியாது. அபராதம் விதித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்….

You may also like

Leave a Comment

10 + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi