Thursday, July 4, 2024
Home » கடலூர் அருகே பரபரப்பு காவலர் தேர்வு எழுத வந்த மச்சினிச்சியை தோழியுடன் காரில் கடத்த முயற்சி

கடலூர் அருகே பரபரப்பு காவலர் தேர்வு எழுத வந்த மச்சினிச்சியை தோழியுடன் காரில் கடத்த முயற்சி

by Karthik Yash

கடலூர், டிச. 12: கடலூர் அருகே காவலர் தேர்வு எழுத வந்த மச்சினிச்சியை தோழியுடன் காரில் கடத்த முயன்ற அக்காவின் கணவரை போலீசார் கைது செய்தனர். கடலூர் அருகே உள்ள பெரியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம் மகள் ரசிதா(21). இவரது அக்காவின் கணவர் சாந்தசிவம் (33). இரண்டாம் நிலை காவலர் தேர்வு எழுதுவதற்காக நேற்று முன்தினம் ரசிதா மற்றும் அவரது தோழி ஆகியோர் கடலூருக்கு வந்திருந்த நிலையில் மீண்டும் வீடு திரும்ப தேர்வு மையத்தில் நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த ரசிதாவின் மாமா சாந்தசிவம் இருவரையும் காரில் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்ற நிலையில் வழியில் சாந்தசிவத்தின் நண்பர்கள் சிலரும் காரில் ஏறி உள்ளனர்.

சந்தேகமடைந்த ரசிதா தன்னை காரில் இருந்து இறக்கிவிடும்படி கேட்டுக் கொண்ட நிலையில் அவரை காரில் இருந்து இறக்காமல் தொடர்ந்து கடத்திச் செல்ல முயன்றார். இந்நிலையில் கடலூர் அருகே சாவடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் ரசிதா தனது தோழியுடன் காரில் இருந்து குதித்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு புதுநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் ரசிதா அவரது தோழியுடன் கடத்தப்பட்டது தெரிய வந்தது.இதைத்தொடர்ந்து கடத்திய ரசிதாவின் மாமா சாந்தசிவம், அவரது நண்பர்கள் கோபு(35), கிருஷ்ணராஜா (36) உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்ததுடன் காைரயும் பறிமுதல் செய்தனார். விசாரணையில் சாந்தசிவம் இரண்டாவது திருமணம் செய்ய ரசிதாவை கடத்தியது தெரிய வந்தது. இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வு எழுத வந்த இரண்டு பெண்களை காரில் கடத்திய சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

You may also like

Leave a Comment

4 + fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi