தூத்துக்குடி, ஜூலை 3:தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்தவர் சுரேஷ் மகன் சுதாகர் (27). இவர், நேற்று முன்தினம் மிக்கேல் அந்தோணி என்பவருக்கு சொந்தமான படகில், அவரது தந்தை சுரேஷ், உரிமையாளர் மிக்கேல் அந்தோணி ஆகியோருடன் மீன்பிடிக்க சென்றார். தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் இருந்து சுமார் 5 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, தடுமாறி கடலுக்குள் விழுந்து விட்டார். அருகில் இருந்த படகில் இருந்தவர்கள் விரைந்து தவறி விழுந்த சுதாகரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியில் அவர் உயிரிழந்தார்.