தூத்துக்குடி, ஜூலை 3:தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்தவர் சுரேஷ் மகன் சுதாகர் (27). இவர், நேற்று முன்தினம் மிக்கேல் அந்தோணி என்பவருக்கு சொந்தமான படகில், அவரது தந்தை சுரேஷ், உரிமையாளர் மிக்கேல் அந்தோணி ஆகியோருடன் மீன்பிடிக்க சென்றார். தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் இருந்து சுமார் 5 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, தடுமாறி கடலுக்குள் விழுந்து விட்டார். அருகில் இருந்த படகில் இருந்தவர்கள் விரைந்து தவறி விழுந்த சுதாகரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியில் அவர் உயிரிழந்தார்.
கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
previous post