கடமையை செய்ய தவறுவதால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்புக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து

சென்னை: கடமையை செய்யத் தவறுவதால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்புக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவாரூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்தபோது, பார்வை பறிபோனதாக, இழப்பீடு தரக்கோரி திருவாரூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. மருத்துவர்கள் அலட்சியம் காரணமாகவே பார்வை பறிபோனதாக கூறி விஜயகுமாரி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு 2015ல் திருவாரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, நீதிமன்ற உத்தரவுப்படி தமக்கு இழப்பீடு வழங்கவில்லை என்றும், அந்த உத்தரவை அமல்படுத்தக் கோரியும் விஜயகுமாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இழப்பீடு தராததால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆட்சியர் அலுவலக அசையும் சொத்துகளை ஜப்தி செய்ய செப்டம்பரில் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடமையை செய்ய தவறுவதால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்புக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு. எனவே நிதி இழப்பை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடமே வசூலிக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி, அறுவை சிகிச்சையில் கண்களை இழந்த திருவாரூரைச் சேர்ந்த விஜயகுமாரிக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டை ஜனவரி 10ம் தேதிக்குள் வழங்குமாறும், அதுவரை ஜப்தி உத்தரவை நிறுத்தி வைக்குமாறும் உத்தரவிட்டார்.  …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்