Sunday, June 30, 2024
Home » கடமைகளை செய்வதற்கு தான் சம்பளம் வழங்கப்படுகிறதே தவிர ஏசி அறையில் இருப்பதற்கு அல்ல : அதிகாரிகளுக்கு குட்டுவைத்த ஐகோர்ட்!

கடமைகளை செய்வதற்கு தான் சம்பளம் வழங்கப்படுகிறதே தவிர ஏசி அறையில் இருப்பதற்கு அல்ல : அதிகாரிகளுக்கு குட்டுவைத்த ஐகோர்ட்!

by kannappan

சென்னை: கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் குறித்து 2 வாரங்களில் அறிக்கை தக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திரிசூலத்தில் உள்ள திரிசூல நாதர் கோயிளுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை  மீட்க உத்தரவிட கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே உயர்நீதிமன்றம் கோயில் நிலங்களை ஆக்கிரமித்ததார்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பது துண்டிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறினார். அதேபோல் அந்த நிலத்திற்கான வாடகை நியாயமான முறையில் நிர்ணயிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை செயல் அதிகாரிகள் அமல்படுத்தவில்லை என நீதிபதிகள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்காமல் ஆக்கிரமிப்புகளை ஊக்குவித்தது கோவில் நிர்வாகம் தான் என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கோயில் நிர்வாகத்தை கவனிக்க வேண்டிய செயல் அலுவலர் ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்த்துக் கொண்டு செயல்படுவதாகவும் நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர். கடமைகளை செய்வதற்கு தான் இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறதே தவிர ஏசி அறையில் இருப்பதற்கு அல்ல, எனவே இவர்களது ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்ய கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் கோயில் செயல் அலுவலர்களின் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டிய அறநிலையத்துறை ஆணையரும் அவருடைய கடமையை செய்ய தவறிவுள்ளதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட கோயிலை பொறுத்தவரையில் 1,640 ஆக்கிரமிப்பாளர்களை அகற்றவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். செயல் அலுவலர்களின் செயல்பாட்டை ஆணையர் கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்ததாக செயல் அலுவலர்களை உடனடியாக அங்கிருந்து மாற்றவேண்டும் என்றும், 2014 முதல் அந்த கோயிலில் செயல் அலுவலர்களாக பணியாற்றியவர்களுடைய பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என அரசு தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் இதுபோல  கோயில் நிலங்களில் உள்ள அக்கிரமிப்புகளின் விவரங்ளையும், அவற்றை அகற்ற எடுக்க பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு  விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். …

You may also like

Leave a Comment

3 − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi