வருசநாடு : கடமலைக்குண்டு அருகே 8 கிலோ கஞ்சாவுடன் பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.கடமலைக்குண்டு அருகே பாலூத்து கிராமத்தில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக கடமலைக்குண்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கடமலைக்குண்டு இன்ஸ்பெக்டர் சரவணன், உதவி சார்பு ஆய்வாளர் ஜெய்குமார் தலைமையிலான போலீசார் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாலூத்து சேர்மலையாண்டி கோவில் பகுதியில் இருந்து ஒரு ஆட்டோ கடமலைக்குண்டுவை நோக்கி வேகமாக வந்தது. ஆட்டோவை மடக்கி போலீசார் சோதனையிட்டபோது 8 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து கடமலைக்குண்டு போலீசார் ஆட்டோவில் வந்த பாலூத்து ஜெயபால், சத்யா, ஜெயசூர்யா மற்றும் முத்துதேவன்பட்டியை சுந்தரபாண்டி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் கஞ்சாவிற்ற ரூ.40 ஆயிரம் பணம் மற்றும் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்….