கடன் வாங்கி தருவதாக வீடு அபகரிப்பு: பாஜக பிரமுகர் மீது பெண் புகார்

தூத்துக்குடி: தூத்துக்குடி கேடிசிநகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி (52). இவர் தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனு: கடந்த 2015ம் ஆண்டு எனக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டது. இதனால் தூத்துக்குடி குறிஞ்சிநகரை சேர்ந்த பாஜ பிரமுகர் மனோகர் நாட்டாமை(49)மற்றும் அவரது மனைவி ஜெயபார்வதி(49) இருவரும் எனக்கு வங்கி கடன் வாங்கி உதவி செய்ய முன்வருவதாக தெரிவித்தனர். இதனை நம்பி எனது வீட்டை அவர்களது பெயருக்கு எழுதி கொடுத்தேன். லோன் முடிந்ததும் அவர்கள் வீட்டை என் பெயருக்கே மாற்றி தருவதாக உறுதியளித்தனர்.மேலும் அதனை வைத்து அவர்கள் நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள ஒரு வங்கியில் ரூ.25 லட்சம் கடன் பெற்று தருவதாக தெரிவித்தனர். இதனால் ரூ.6.50 லட்சம் செலவில் பத்திர பதிவு செய்து மாற்றிக்கொடுத்தேன். தொடர்ந்து கடந்த 2021 நவம்பர் வரையில் அந்த வங்கிக்கு மாதந்தோறும் 25 ஆயிரம் தவணை கட்டியுள்ளேன். மேலும் அவர்கள் கார் வாங்க பணம் கேட்டபோது ரூ.1.50 லட்சமும், புதிய தொழில் செய்வதற்காக ரூ.6 லட்சமும் கொடுத்தேன். இன்று வரையில் எதையும் திரும்ப தராமல் மோசடி செய்து, மிரட்டி வருகின்றனர். அவர்களால் எந்த நேரமும் எனக்கு ஆபத்து வரலாம். எனவே இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்….

Related posts

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவர் குத்திக்கொலை

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது