புதுடெல்லி: மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடந்தது. இதில், செல்போன் மூலம் கடன் தருவதாக அடிக்கடி குறுந்தகவல் அனுப்பப்படுவது, தொல்லை தரும் வரும் டெலிமார்க்கெட் போன் அழைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, டெலிமார்க்கெட்டிங் மூலம் தொல்லை கொடுப்போர் மீது அபராதங்கள் விதிக்கவும், தொடர்ந்து ஈடுபட்டால் இணைப்புகளை துண்டிக்கவும் நடவடிக்கை எடுக்கவும், தொலைதொடர்பு வசதிகளை பயன்படுத்தி நடக்கும் நிதி மோசடிகளை தடுக்க டிஜிட்டல் உளவு பிரிவு தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது….