கடனுக்கு மது தர மறுத்த பார் மேலாளருக்கு பாட்டில் குத்து

 

தவளக்குப்பம், ஜூலை 17: புதுச்சேரி தவளக்குப்பம் அடுத்த தானம்பாளையம் அங்காளம்மன் நகரை சேர்ந்தவர் தேவநாதன் (42). இவர், ஆர்.கே.நகரில் உள்ள ஒரு தனியார் பாரில் மேலாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் (26) என்பவர் மது பாருக்கு வந்து மதுவை கடனாக கேட்டுள்ளார். அதற்கு தர மறுத்த தேவநாதனை தரக்குறைவாக திட்டி சென்றுள்ளார். இதனை தொடர்ந்து இரவு 11.10 மணியளவில் பாரை மூடி தேவநாதன் வெளியே வந்தார்.

அப்போது வெளியே அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (29) என்பவருடன் ஆகாஷ் பீர் பாட்டிலுடன் தயாராக காத்திருந்தார். இருவரும் தரக்குறைவாக திட்டி, பீர் பாட்டிலால் குத்தி, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர். காயமடைந்த தேவநாதன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து ஆகாஷ், சதீஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

மது அருந்த பணம் தராததால் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி மாயம்