சேலம், மே 14: சேலத்தில் கடந்த ஒரு மாதத்தில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 6டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தற்ேபாது மாம்பழம் சீசன் தொடங்கியுள்ளது. அதேநேரத்தில் வியாபார ேநாக்கத்தில் ராசாயன ஸ்பிரே தெளித்து மாம்பழங்களை பழுக்க வைப்பதாக புகார்கள் தொடர்கிறது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள், அந்தந்த மாவட்ட பழ வியாபாரிகளை எச்சரித்தும், குடோன்களை கண்காணித்தும் வருகின்றனர்.
சேலம் பழைய, புதிய பஸ் நிலையங்கள் மற்றும் ஆத்தூர், மேட்டூர், தலைவாசல், ஓமலூர் பஸ் நிலையத்தில் உள்ள பழக்குடோன்களில் பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா? என்று உணவு பாதுகாப்பு அலுவலர்களும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சைனாகல், கார்பைடு கல், எத்தீபான் மூலம் பழுக்க வைக்கப்படும் மா, வாழைப் பழங்கள் தான் தற்போது விற்பனைக்கு வருகிறது. கார்பைடு கல்லில் இருக்கக்கூடியது அசிட்டிலீன் வாயு. இந்த வாயுவின் மூலம் மா, வாழை போன்றவை 12முதல்24 மணி நேரத்துக்குள் பழுக்க வைக்க முடிகிறது. காய்களில் இயற்கையாக உள்ள எத்திலின் வாயு மூலம் அவை 48 முதல் 72மணி நேரத்துக்குள் பழுத்துவிடும்.
மேலும், எத்தீபான் மூலம் மாம்பழங்களை அப்படியே நினைத்து பழக்க வைக்கப்படுகிறது. அவசர அவசரமாக கல்லா கட்டும் நோக்கத்தில் வியாபாரிகள் செயற்கையாக பழங்களை பழுக்க வைக்கின்றனர். செயற்கையான ரசயானம் மூலம் ஸ்பிரே தெளித்து மாங்காய்களை பழுக்க வைக்கும் பழக்குடோன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள பழக்குடோனில் நடத்திய சோதனையில் 6டனுக்கு மேல் செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அந்த கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை தொடர்ந்து உண்பதன் மூலம் நரம்பு மண்டலம் பாதிக்கும். கல்லீரல், குடல், இரைப்பையும் பாதித்து புற்று நோயை ஏற்படுத்தும். குழந்தைகள், முதியவர்கள் இதுபோன்ற பழங்களை அதிகம் உட்கொண்டால், அவர்களுக்கு கடும் வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை ஏற்படும். செயற்கையான முறையில் மா, வாழைப்பழங்களை பழுக்க வைத்தால் அந்த வியாபாரிகளுக்கு ₹ 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இதற்காக பழக்குடோன்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது,’’ என்றனர்.