கடத்தூரில் கேட்பாரற்று நின்ற காரால் பரபரப்பு

தர்மபுரி, ஜூலை 7:கடத்தூரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே கடந்த சில நாட்களாக கேட்பாரற்று கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் இதுபற்றி கடத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காரை மீட்டு காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து கார் யாருக்கு சொந்தமானது, எதற்காக இங்கு நிறுத்தப்பட்டது என விசாரித்து வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை