கஞ்சா விற்ற 9 பேர் கைது

2.200 கிலோ, ₹10,650 பறிமுதல்கிருஷ்ணகிரி, மே 13: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அந்தந்த காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஊத்தங்கரை ஜோதி நகரில் கஞ்சா விற்ற அதேபகுதியை சேர்ந்த பிரவீன்குமார்(29) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ₹400 மதிப்பிலான 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல், ₹3200 மதிப்பில் ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்த பர்கூர் வரமலைகுண்டா முத்துலப்பா(45), ₹200 மதிப்பில் 50 கிராம் கஞ்சா வைத்திருந்த கந்திக்குப்பம் வரட்டனப்பள்ளி போடிப்பாறை நடராஜ் (29), 10 கிராம் கஞ்சா வைத்திருந்த கேஆர்பி டேம் பகுதியை சேர்ந்த தீபக்குமார்(26), ₹500 மதிப்பில் 50 கிராம் கஞ்சா வைத்திருந்த காவேரிப்பட்டணம் கோவிந்தசெட்டி தினேஷ்(22), 25 கிராம் கஞ்சா வைத்திருந்த வேப்பனஹள்ளி சசிகுமார்(21), ₹1500 மதிப்பில் 150 கிராம் கஞ்சா வைத்திருந்த ஓசூர் காமன்தொட்டியை சேர்ந்த பவன்கல்யாண், சூளகிரியில் 10 கிராம் கஞ்சா வைத்திருந்த கிருஷ்ணகிரி ஆசாத் நகரை சேர்ந்த தன்வீர்(28), தேன்கனிக்கோட்டை பெட்டமுகிலாளம் கொடகரை சாலையில் மாதேஸ்வரன் மலை அருகே ₹5 ஆயிரம் மதிப்பில் 900 கிராம் கஞ்சா விற்ற சிவலிங்கன் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ₹11 ஆயிரத்து 50 மதிப்பிலான 2 கிலோ 200கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சிவலிங்கனிடம் இருந்து ₹10,650 பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

துறையூர் மூங்கில் தெப்பக்குளம் காசி விஸ்வநாதர் சிவன் கோயில் கும்பாபிஷேகம்

திருச்சி அண்ணா நகர் கிளையில் கூட்டுறவு துறை பணியாளர் நாள்

திருவெறும்பூர் அருகே ஆட்டோவில் கஞ்சா விற்ற 2 பேர் கைது