கஞ்சா விற்ற 4 பேர் கைது

அண்ணாநகர்: கோயம்பேடு ரயில் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கோயம்பேடு போலீசாருக்கு  நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு,  சந்தேகத்திற்கிடமாக, சுற்றி திரிந்த  ஒரு சிறுவன் உள்பட 4 பேரை  போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் நெற்குன்றம் பகுதியை சேர்ந்த பார்த்திபன்(28), விக்னேஷ்வரன்(20), வசந்த்(19) மற்றும் 16 வயது சிறுவன்  என்பதும், இவர்கள் தினமும் ரயில் நகர் பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து, கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்தனர்….

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்