கஞ்சா விற்ற வாலிபர் கைது

 

சேலம், அக்.7: சேலம் அம்மாபேட்டை பகுதியில், சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில், அம்மாபேட்டை போலீஸ் எஸ்ஐ ராமமூர்த்தி தலைமையிலான போலீசார், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில், அம்மாபேட்டை ஜங்ஷன் பகுதியில் மறைந்திருந்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ஏ.என்.மங்கலம் பகுதியை சேர்ந்த ராகுல் (21) என்பவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து சிறிய அளவிலான கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.

 

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்