ஊத்தங்கரை, ஜூன் 1: ஊத்தங்கரை டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான தனிப்படை போலீசார், சிங்காரப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கேத்துநாயக்கன்பட்டி பகுதியில், ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ரவி(57) என்பவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்கு வைத்திருந்த 750 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.