திருப்பூர், மே 10: திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் ரோந்து பணிமேற்கொண்டனர். பவானி நகரில் சந்தேகத்திற்கிடாமாக பெண் ஒருவர் நின்றார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் நெருப்பெரிச்சல் ஜி.என். கார்டனை சேர்ந்த வசந்தா (52) என்பதும், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இதே போல் அவிநாசி ரோடு பங்களாபஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்ற மணிவண்ணன் (20) என்பவரையும் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.