திருப்பூர், ஏப்.18: திருப்பூர் பவானி நகரில், வடக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, பவானி நகர் 2வது வீதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (24) என்பதும், பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இது குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிந்து ரஞ்சித்குமாரை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.