கஞ்சா விற்ற இருவர் கைது

சூளகிரி, செப்.26: சூளகிரி அருகே பேரிகை பகுதியில், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக, பேரிகை போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தில், அவர்களிடம் ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, பேரிகை மாருதி நகரை சேர்ந்த விஸ்வநாத்(38), பேரிகை போஸ்டு ஆபிஸ் பின்புறம் பகுதியை சேர்ந்த சாதிக்பாஷா(37) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் இருவரையும் அடைத்தனர்.

Related posts

வத்திராயிருப்பில் மருத்துவமனையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தீயில் மரங்கள் எரிந்து நாசம்

சித்தர் கோயில் ஜெயந்தி விழா