தேன்கனிக்கோட்டை, மே 19: தேன்கனிக்கோட்டை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பெட்டமுகிலாளம் ஊராட்சி, போலாக்கொல்லை கிராமத்திற்கு சென்ற போது, வீரபத்திரப்பா என்பவர் கஞ்சா விற்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார், வீரபத்திரப்பாவை கைது செய்து, 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.