கஞ்சா விற்பனை; 4 பேருக்கு வலை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் உத்தரவின்பேரில் டிஎஸ்பி சந்திரதாசன் மேற்பார்வையில் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் காக்களூர் எடை மேடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த 4 மர்ம நபர்கள் போலீசார் வருவதை கண்டதும் தாங்கள் வைத்திருந்த பையை சாலையோரம் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்கள் வீசி சென்ற பையை திறந்து பார்த்தபோது அதிலிருந்த 400 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை பறிமுதல்  செய்தனர்.மேலும் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நபர்கள் யார் என விசாரணை நடத்தி வருகிறார்….

Related posts

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது