கமுதி, ஜூன் 22: கமுதி அருகே அபிராமம் பேருந்து நிலையத்தில் இருந்து பார்த்திபனூர் சாலையில் உள்ள சலூன் கடை அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று அபிராமம் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சென்று கஞ்சா விற்றுக்கொண்டிருந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். விசாரித்ததில், அவர் அபிராமம் அருகே உள்ள தரைக்குடி கிராமத்தைச் சேர்ந்த பொன்முத்துராமலிங்கம் (22) என்பதும் தெரிய வந்தது. அவரிடமிருந்து 830 கிராம் கஞ்சாவும், வாள் ஒன்றும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் மீது அபிராமம் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.