கஞ்சா போதையில் ரகளை; 19 வாகனங்கள் உடைப்பு: 3 பேருக்கு வலை

சென்னை: கே.கே.நகர், 10வது செக்டரில் உள்ள 60, 61, 63வது தெருவில் அப்பகுதி மக்கள் அவரவர் வீட்டின் முன்பு கார் மற்றும் பைக்களை நிறுத்துவது வழக்கம். நேற்று முன்தினம் நள்ளிரவு கஞ்சா போதையில் அங்கு வந்த 3 பேர், அங்குள்ள வாகனங்களை அடித்து உடைத்தனர். சத்தம் கேட்டு பொதுமக்கள் வெளியே வந்தபோது, கத்தி முனையில் அவர்களை மிரட்டிவிட்டு சென்றுள்ளனர்.இதில், 3 கார்கள், 6 ஆட்டோ, 10 பைக்குகள் அடித்து உடைக்கப்பட்டன. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரிக்கின்றனர். …

Related posts

சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்

பந்தலூர் அருகே கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு கடத்திய உயர் ரக போதை பொருள் பறிமுதல்

தண்ணீர் பிடிப்பதில் தகராறு நண்பரை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர் கைது