கஞ்சா கடத்திய 2 பேர் கைது

 

பேரையூர், ஜூலை 5: பேரையூரில் டூவீலரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். பேரையூர் பகுதியில் மதுரை புறநகர் எஸ்பி சிவபிரசாத் தலைமையிலான ஸ்பெஷல் டீம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெருங்காமநல்லூர் அரசுப்பள்ளி அருகே சந்தேகப்படும்படியாக டூவீலரில் சென்றவர்களை மடக்கிப் பிடித்த போலீசா சோதனை செய்தனர். அவர்களிடமிருந்து 800 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அயோத்திபட்டியைச் சேர்ந்த தெய்வேந்திரன் மகன் அருண்குமார்(24), கணவாய்பட்டியைச் சேர்ந்த இளங்கோவன் மகன் நாத் (25) என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து சேடபட்டி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Related posts

கே.ஜி.கண்டிகை வாரசந்தை மைதானத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் தொற்றுநோய் அபாயம்: பொதுமக்கள் அச்சம்

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்கள் ரத்து