கஞ்சா கடத்திய பெண் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை போலீசார், தண்ணீர் குளம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த பெண், போலீசாரை கண்டதும் வாகனத்தை திருப்பியதால் சந்தேகமடைந்த போலீசார், அந்த பெண்ணை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 750 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.விசாரணையில் அவர், புட்லூர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மனைவி சுகந்தி (30) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து, இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்….

Related posts

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது