சென்னை: விசாகப்பட்டினத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு 2019 ஆகஸ்ட் மாதத்தில் ரயில் மூலம் கஞ்சா கடத்தியதாக, தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் எழும்பூர் ரயில் நிலையத்தில், புதுக்கோட்டையை சேர்ந்த சண்முக பிரியா மற்றும் மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா, இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.