உசிலம்பட்டி, ஆக. 10: உசிலம்பட்டியை அடுத்த எழுமலை பகுதியில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமையில் போலீசார் ரோந்து பணிகளை மேற்கொண்டனர். அப்போது எழுமலையை அடுத்து மீனாட்சிபுரம் விலக்கில் சந்தேகப்படும் வகையில் ஒருவர் டூவீலருடன் நின்றிருந்தார். அவரை மடக்கிப்பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் பெரியகட்டளையை சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் கணேசன்(45) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது டூவீலரை போலீசார் சோதனையிட்டனர். அதில் ஒரு பையில் 6 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 6 கிலோ கஞ்சா மற்றும் டூவீலரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கணேசனை கைது செய்தனர்.