சென்னை: எழும்பூர் ரயில் நிலையம் பின்புறம் சிஎம்ஆர்எல் ரயில் நிலைய பார்க்கிங் அருகே சந்தேகப்படும் படியாக வந்த 2 நபர்களை நுண்ணறிவு பிரிவு போலீசார் அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்க அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை ெசய்த போது அதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான 1 கிலோ கஞ்சா ஆயில் மற்றும் 1 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.விசாரணையில் அவர் கள் ஆந்திராவை சேர்ந்த ஷாரத் ஜானகி ராமைய்யா (எ) ஜானி (25) மற்றும் லஷ்மன் (28) என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் இருந்து ரயில் மூலமாக சென்னைக்கு கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து நுண்ணறிவு போலீசார் 2 பேர் மீது வழக்குபதிந்து கஞ்சா ஆயில் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்….