Saturday, July 6, 2024
Home » கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு!: இலங்கை கடற்படை அட்டூழியத்தால் மீனவர்கள் கொந்தளிப்பு..!!

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு!: இலங்கை கடற்படை அட்டூழியத்தால் மீனவர்கள் கொந்தளிப்பு..!!

by kannappan

ராமநாதபுரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமேஸ்வரம் பாம்பனில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று காலை 400 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து பணிக்கு வந்த இலங்கை கடற்படையினர் விசைப்படகு ஒன்றின் மீது துப்பாக்கியால் சுட்டனர். 
இதனால் அச்சமடைந்த இதர மீனவர்கள் ராமேஸ்வரம் கரைக்கு திரும்பினர். பாம்பனில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் இலங்கை கடற்படையினர் நுழைந்து அத்துமீறியதாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் குற்றம்சாட்டினர். இலங்கை கடற்படையினர் சுட்டதில் பாம்பனை சேர்ந்த லிம்ரெட் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு சேதம் அடைந்தது. இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியத்தால் தமிழக மீனவர்கள் கொந்தளிப்பு அடைந்துள்ளனர்.

You may also like

Leave a Comment

14 + thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi