கங்கனா மீது மீண்டும் போலீசில் புகார்

புதுடெல்லி: மும்பை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பாரத் சிங், அவரது வழக்கறிஞர்கள் ஆஷிஷ் ராய் மற்றும் அங்கித் உபாத்யாய் மூலம் விலே பார்லே காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ‘பாலிவுட் நடிகை கங்கனா ராவத், டிவி நேரடி நேர்காணல் நிகழ்ச்சியின் போது இந்திய குடிமக்கள், முன்னாள் சுதந்திர போராட்ட வீரர்கள், முன்னாள் தலைவர்களின் கண்ணியம் மற்றும் மரியாதையை குறைக்கும் வகையிலும், அரசியலமைப்புக்கு எதிரான கருத்தை தெரிவித்தார். கடந்த 2014ம் ஆண்டுக்கு பின்னர்தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்று தெரிவித்தார். இது, சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளை அவமதிக்கும் கருத்தாகும். எனவே, அவரது பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும்; அவர் மீது எம்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து கங்கனா மீது வழக்கு பதிவு செய்வது குறித்து போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இதே பிரச்னைக்காக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயல் தலைவர் பிரீத்தி மேனன், கங்கனா மீது எப்ஐஆர் பதியக்கோரி மும்பை காவல்துறையில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு; உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சிராக் பஸ்வான் மேல்முறையீடு?

வயநாடு நிலச்சரிவு பலிக்கு பசுக்களை கொன்றதே காரணம்: பாஜ மூத்த தலைவர் சர்ச்சை

ஆந்திர மாநிலத்தில் தலைநகர் அமராவதி அமைக்க சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஒப்பந்தம்: நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் தகவல்