ஓரினச் சேர்க்கை விவகாரத்தில் சிறுவனை கொலை செய்த வாலிபர் மீது குண்டாஸ்

தர்மபுரி, செப்.30: தர்மபுரியில் ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபரை, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுவன், கடந்த ஜூலை மாதம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தான். சிறுவன் திடீரென மாயமான நிலையில், அவனை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனை தேடி வந்தனர். அப்போது, அதே பகுதியில் பயன்பாடு இல்லாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், சிறுவன் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுவன் சடலத்தை கைப்பற்றி, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரிசோதனையில் ஓரினச்சேர்க்கை விவகாரத்தில், சிறுவன் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ்(19) என்பவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். இந்நிலையில் பிரகாசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், தர்மபுரி கலெக்டர் சாந்திக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்று, பிரகாசை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவை, கலெக்டர் பிறப்பித்தார். அதன் பேரில், கிருஷ்ணாபுரம் போலீசார் சேலம் மத்திய சிறையில் உள்ள பிரகாஷிடம், அதற்கான உத்தரவு நகலை வழங்கினர்.

Related posts

சமயபுரம் டோல்கேட்டில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை அருகே கார்-மினிலாரி மோதல் திருச்சியை சேர்ந்த இருவர் பரிதாப பலி

பலப்படுத்தும் பணி தீவிரம் தொட்டியம் அருகே மரத்திலிருந்து குதித்த சிறுவன் உயிரிழப்பு