ஓபிஎஸ்சின் கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் இல்லை: ஜெயக்குமார் பேட்டி

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் கூட்டிய கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் யாரும் இல்லை என்று ஜெயக்குமார் கூறினார். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்  சென்னை, வண்ணாரப்பேட்டையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் போட்டி கூட்டம் என்பது, ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி போல. அந்த கம்பெனியின் இயக்குநர்கள் கூட்டம்தான் அது. அது கட்சி கூட்டம் கிடையாது. அந்த நிறுவனத்தின் சார்பில் விளம்பரம் அளித்துள்ளார்கள். ஆட்களை தேர்வு செய்கிறார்கள். எனவே இந்த கூட்டத்தைக் கட்சி கூட்டமாக நாங்கள் பார்க்கவில்லை. கட்சிக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை. அவரின் செயல்பாடுகள் எதுவும் தமிழகத்தில் எடுபடாது. அந்த கூட்டத்தில் எந்த அதிமுக தொண்டரும் கிடையாது. கண்ணுக்கு தெரிந்து கட்சி அலுவலகம், கட்சியின் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், அமைப்பு செயலாளர்கள், 1 லட்சம் கிளைக் கழகம், அனைத்தும் எங்களிடத்தில் உள்ள நிலையிலே எடப்பாடியார் தலைமையேற்று கட்சி  செயல்பட்டு வருகிறது. பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு நல்ல இமேஜ் உள்ளது. கூடா நட்பு கேடாய் முடியும். இது என்னுடைய ஆலோசனை. அதிமுகவை பொறுத்தவரையில் என்றைக்குமே அதிமுக தலைமையிலான கூட்டணிதான். ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் தலைமையில்தான் கூட்டணி இருந்தது. உள்ளாட்சி தேர்தலில் அவர்கள் நட்பு ரீதியாகத் தனியாக நின்றார்கள். நாங்கள் தனியாக நின்றோம்….

Related posts

சொல்லிட்டாங்க…

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக ஆலோசனை !!