அரூர், நவ.25 அரூர் அருகே தீர்த்தமலை லாரி, வேன், கார் உரிமையாளர்கள் மற்றும் ஒட்டுநர்கள் சங்கம் திறப்பு விழா நடந்தது. அரூர் அதிமுக எம்எல்ஏ சம்பத்குமார் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தனர். விழாவில் ஒன்றிய செயலாளர் பசுபதி, ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணி சரவணன், ஒன்றிய குழு உறுப்பினர் புஷ்பலதா ரவிக்குமார், முன்னாள் தலைவர் சங்கர், சாமிக்கண்ணு, கோவிந்தன், கோகன், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.