வேளச்சேரி: பெசன்ட்நகரை சேர்ந்த கிருத்திகா (28), கடந்த மாதம் 25ம் தேதி தனது வீட்டின் அருகே தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த நபர், கிருத்திகாவின் கழுத்தில் கிடந்த 5 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பினார். இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீசில் கிருத்திகா புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், ஆசாமி ஒருவர் தொடர்ந்து அந்த பகுதியில் பைக்கில் சுற்றி வருவதும், பின்னர் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் பதிவாகி இருந்தது. பைக் பதிவு எண்ணை வைத்து விசாரித்தபோது, அது பெருங்குடியை சேர்ந்தவரின் பைக் என்பது தெரிந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது, தன்னுடன் அறையில் தங்கியுள்ள நண்பனுக்கு தனது பைக்கை எடுத்து சென்றதாக கூறினார். அவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவரது பெயர் திவாகர் (26) என்பதும், நெய்வேலியை சேர்ந்த அவர் டிப்ளமோ படித்துவிட்டு, நெய்வேலியில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வந்ததும் தெரியவந்தது. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பலரிடம் லட்சக்கணக்கில் கடன் பெற்றுள்ளார். அதை திருப்பி செலுத்த முடியாததால், கடன் கொடுத்தவர்கள் தொல்லை செய்துள்ளனர். இதனால், சென்னைக்கு வந்து, பெருங்குடியில் நண்பன் அறையில் தங்கி, வேலை தேடியுள்ளார். ஆனால், வேலை எதுவும் கிடைக்காததால், விரக்தி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 24ம் தேதி மெரினா கடற்கரைக்கு வந்து, எதிர்காலத்தை எண்ணி கஷ்டப்பட்டுள்ளார். அப்போது, வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு, அதில் வரும் பணத்தில் கடனை அடைத்துவிட்டு பின்னர் வேறு தொழில் பார்க்கலாம் என்று முடிவு செய்துள்ளார். அதன்படி நண்பரின் பைக்கை எடுத்துக்கொண்டு செயின் பறித்துள்ளார் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்….
ஓட்டல் நடத்தியதில் நஷ்டம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் அதிரடி கைது
previous post