Saturday, September 21, 2024
Home » ஓடையில் மண் எடுப்பதில் தகராறு சகோதரி, மாமனை நடுரோட்டில் ஓடஓட விரட்டி வெட்டிய தம்பி: சமூக வலை தளங்களில் வீடியோ வைரல்

ஓடையில் மண் எடுப்பதில் தகராறு சகோதரி, மாமனை நடுரோட்டில் ஓடஓட விரட்டி வெட்டிய தம்பி: சமூக வலை தளங்களில் வீடியோ வைரல்

by kannappan

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே ஆயந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் (47), மின் ஊழியர். இவரது மனைவி ராஜசுலோச்சனா (42), மகன் கிருஷ்ணகுமார் (18). ராஜசுலோச்சனாவின் தம்பி அரிகிருஷ்ணன்(40), உணவகம் நடத்தி வருகிறார். இருவருக்கும் சொந்தமான நிலம் அருகருகே உள்ளது. அங்குள்ள ஓடையில் மண் எடுப்பதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் அரிகிருஷ்ணணை, அக்கா கணவரான அய்யனார், அவரது மகன் கிருஷ்ணகுமார் ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அரிகிருஷ்ணன் கடந்த 15ம் தேதி ஆயந்தூர் பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த ராஜசுலோச்சனா மற்றும் மாமன் அய்யனாரை துரத்தி துரத்தி பட்டா கத்தியால் கழுத்து, கை, தலை ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது….

You may also like

Leave a Comment

1 + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi