சேந்தமங்கலம், செப்.14: எருமப்பட்டி அருகே ஓடும் பஸ்சில் முசிறியைச் சேர்ந்த ஊழியர் மயங்கி விழுந்து பலியானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த கரிகாலி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன்(56). இவர், ஈரோட்டில் உள்ள தனியார் லாரி புக்கிங் ஆபீசில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் வேலை முடிந்ததும், நாமக்கல் வழியாக தனியார் பஸ்ஸில் துறையூர் சென்றுள்ளார். எருமப்பட்டி அடுத்த அலங்காநத்தம் பிரிவு பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது திடீரென சுந்தர்ராஜன் மயங்கி சிரிந்தார். அதனைக்கண்டு திடுக்கிட்ட சக பயணிகள், அவரை மீட்டு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு, பரிசோதித்து பார்த்ததில் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓடும் பஸ்சில் மயங்கி தொழிலாளி திடீர் சாவு
previous post