கோவை: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண், கோவை காந்திபுரத்தில் விடுதியில் தங்கி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படிக்கிறார். இவர் நேற்று முன்தினம் சேலத்தில் இருந்து கோவைக்கு அரசு பஸ்சில் இரவு நேரத்தில் வந்துள்ளார். அந்த பஸ்சில் கண்டக்டராக பணியாற்றிய ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த பூவேந்திரன் (31), இளம்பெண்ணின் சீட்டுக்கு பின்னால் உட்கார்ந்திருந்தார். அந்த பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்துள்ளார். நீலாம்பூர் அருகே வந்தபோது இளம்பெண் ஆவேசமடைந்து கண்டக்டர் முகத்தில் பளாரென அறைந்தார். சத்தம் கேட்டு பயணிகள் விசாரித்தனர். அப்போது கண்டக்டர் அத்துமீறி நடந்துகொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காட்டூர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மானபங்கம், பெண்கள் வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கண்டக்டர் பூவேந்திரனை கைது செய்தனர். …