ராசிபுரம், ஜூலை 5: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த தனியார் பஸ் ஒன்று, நேற்று முன்தினம் ராசிபுரம் பகுதியில் இருந்து, நாமகிரிப்பேட்டைக்கு சென்று கொண்டு இருந்தது. காக்காவேரியை அடுத்த பெட்ரோல் பங்கை தாண்டிய பஸ், வளைவில் திரும்பும் போது, படியின் நேர் எதிரே நின்றிருந்த வயதான பெண்மணி ஒருவர், தவறி கீழே விழுந்து இழுத்துச் செல்லப்பட்டார். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த காட்சி வெளியானதை தொடர்ந்து, நாமகிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து, தனியார் பஸ் டிரைவர், நடத்துனர் மற்றும் பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்த 54 வயது பெண், தற்போது சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனியார் பஸ்சில் இருந்து பெண்மணி விழும் காட்சி, தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண்
previous post