ஓசூர், ஆக.26: ஓசூர் செம்படவர் தெருவைச் சேர்ந்தவர் ராஜூ என்கிற ராஜா(31). ஓசூர் ராம்நகரை சேர்ந்தவர் பர்கத் (30). பிரபல ரவுடிகளான இவர்கள் 2பேர் மீதும், பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில், ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்ற இவர்களின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நன்னடத்தை விதிகளை மீறி செயல்பட்டதால், இருவரையும் ஓசூர் டவுன் போலீசார் கைது செய்தனர். பின்னர், 2 பேரையும், ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ராஜாவை தர்மபுரி சிறையிலும், பர்கத்தை சேலம் சிறையிலும் அடைத்தனர்.