ஓசூரில் வாடகை, வரி செலுத்தாத கடைகளுக்கு சீல்

 

ஓசூர், ஜன.26: ஓசூர் மாநகராட்சியில் மொத்தம் 45 வார்டுகள் உள்ளன. இதில், ஆயிரக்கணக்கான கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. பாகலூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில், பல கடைகள் வாடகை செலுத்தாமல் இருந்தன. இதுகுறித்து மாநகராட்சி சார்பில், பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் பணம் கட்டவில்லை.

இதையடுத்து, நேற்று ஓசூர் மாநகராட்சி உதவி கமிஷனர் டிட்டோ தலைமையிலான அலுவலர்கள் அந்த பகுதியில் உள்ள, கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும், வாடகை மற்றும் ஆண்டு வரி கட்டாமல் இருந்தவர்களிடமும் மாநகராட்சி அலுவலர்கள் நிலுவைத் தொகைகளை வசூல் செய்தனர். தொடர்ந்து மற்ற வார்டுகளிலும், நேரடியாக சென்று வரி வசூல் செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்