பெரம்பூர்: வில்லிவாக்கம் ராஜாஜி நகர் 8வது தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (23). கொளத்தூர் வெங்கடேஸ்வரா நகர் காமராஜ் தெருவில் உள்ள சலூனில் வேலை செய்து வருகிறார். இவரும், கொளத்தூர் பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த பெண்ணை அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு பிரகாஷ் என்பவர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ரஞ்சித்குமார் வேலை செய்யும் சலூனுக்கு சென்ற விஷ்ணு பிரகாஷ், ‘நான் காதலித்த பெண்ணை நீ எப்படி காதலிக்கலாம்’ என்று தகராறு செய்துள்ளார். அதற்கு அவர், ‘என்னை அந்த பெண் காதலிப்பதால்தான் நானும் காதலிக்கிறேன்’ என கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது, ரஞ்சித்குமார் தனது தம்பி அஜித்குமாருக்கு போன் செய்து அங்கு வரவழைத்துள்ளார். இதேபோல், விஷ்ணு பிரகாஷ் தனது நண்பர்கள் 5 பேரை அங்கு வரவழைத்துள்ளார். இதையடுத்து, இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது விஷ்ணு பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ரஞ்சித்குமாரை சரமாரியாக வெட்டினர். தடுத்த அஜித்குமாரையும் வெட்டிவிட்டு தப்பினர். இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஷ்ணு பிரசாத் மற்றும் அவரது கூட்டாளிகளை தடி வருகின்றனர்….
ஒரே பெண்ணை காதலிப்பதில் தகராறு அண்ணன், தம்பிக்கு வெட்டு
previous post