Sunday, June 30, 2024
Home » ஒரு வாரத்துக்கு வெளியே போகாதீங்க..! தமிழகத்தில் 26 மாவட்டங்களில் வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ஒரு வாரத்துக்கு வெளியே போகாதீங்க..! தமிழகத்தில் 26 மாவட்டங்களில் வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

by kannappan

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 4-ல் இருந்து 6 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும், முற்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 வரை திறந்தவெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 4-ல் இருந்து 6 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும், முற்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 வரை திறந்தவெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வுமையம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது; ஏப்ரல் 1முதல் 4 வரை தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழக பகுதி நோக்கி வீசுவதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட நான்கிலிருந்து ஆறு டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். வரும் 5ம் தேதி கரூர், தர்மபுரி, சேலம் நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட மூன்றிலிருந்து ஐந்து டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். இதன் காரணமாக ஒருசில இடங்களில் அனல்காற்று வீசக்கூடும். பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள், வாக்காளர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் முற்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 வரை திறந்தவெளியில் வேலை செய்வது மற்றும், ஊர்வலம் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளது….

You may also like

Leave a Comment

2 + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi