ஒரிசா தொழிலாளி சாவு

தொண்டி, செப்.3: தொண்டி அருகே இறால் பண்ணையில் வேலை பார்த்த ஒரிசா தொழிலாளி இறந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாளை இறால் பண்ணையில் ஒரிசா மாநிலம் பரிச்குடா பகுதியை சேர்ந்த பேனுசங்கனா(19) வேலை பார்த்து வந்தார். இவருக்கு நேற்று முன்தினம் உடல் நிலை சரியில்லாததால், தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பேனுசங்கனா உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை