Thursday, July 4, 2024
Home » ஒமிக்ரான் பரவல் – கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

ஒமிக்ரான் பரவல் – கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

by kannappan

டெல்லி: ஒமிக்ரான் வகை கொரோனா பரவல் எதிரொலியாக மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. ஏற்கனவே உள்ள கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.புத்தாண்டு உள்ளிட்ட கொண்டாட்ட நிகழ்வுகளால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் கூட்டம் கூடுவதை தவிர்க்க 144 தடை உத்தரவுகளை கூட மாநில அரசுகள் பிறப்பிக்கலாம் எனவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தேவை ஏற்படுமானால் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தலாம் எனவும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு பரிந்துரைத்துள்ளது.ஒவ்வொரு மாநிலமும் தங்கள் பகுதிகளில் சூழலுக்கு ஏற்ப பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவெடுக்கலாம் எனவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது….

You may also like

Leave a Comment

seventeen − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi