காஞ்சிபுரம்: தொமுச, சிஐடியு, எச்எம்எஸ், ஐஎன்டியூசி, ஏஐடியுசி ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் பொது வேலை நிறுத்ததை வலியுறுத்தி விளக்க பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் நடந்தது.தொமுச துணை செயலாளர் கே.ரவி தலைமை தாங்கினார். தொமுச காஞ்சி மாவட்ட தலைவர் ஏ.கே.இளங்கோவன் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை முன் மொழிந்து தொமுச மாவட்ட செயலாளர் சுந்தர் வரதன், போக்குவரத்து கழக தலைவர் சுதாகரன் பொருளாளர் சேகர் சிஐடியு நிர்வாகிகள் சீனிவாசன், மதுசூதனன், நந்தகோபால் ஆகியோர் பேசினர்.இதில், தொழிலாளர் சட்ட தொகுப்புகளை நான்கையும் கைவிட வேண்டும், மின்சார திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும், பெட்ரோலிய பொருட்களின் மீதான கலால் வரியை குறைத்து அனைத்து வித பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் பணியாற்றிய முன் களப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு காப்பீடு வசதிகளை வழங்க வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.கூட்டத்தில், தொமுச பொருளாளர் கி நடராஜன், பேரவை செயலாளர் பொன்னுராம், சிஐடியு முத்துக்குமார் எஸ்எம்எஸ் மாநில பொருளாளர் ஆபத்சகாயம் ஐஎன்டியூசி தலைவர் சீராளன் ஏஐடிசி மூர்த்தி சிஐடி ஸ்ரீதர் பொருளாளர் வசந்தா நாத்திகம் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். …